ஜம்முகாஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்க கோரி திமுக சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 14 எதிர்க்கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370, 35ஏ சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் காஷ்மீரில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரி திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தில்லி ஜந்தர் மந்தரில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்ததலைவர் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காட்சி சார்பில் சீத்தாராம் யெச்சூரி, பிருந்தாகாரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளின் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர் .